Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்திலிருந்து சிறுவனை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்... வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (19:49 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், சாலையில் சைக்கில் சென்றுகொண்டிருந்த சிறுவனை, ஒரு லாரி மோத வந்தது. அப்போது, அங்கு நின்றிருந்த டிராபிக் போலீஸ்காரர் துரிதமாகச் செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், உள்ள நான்குமுனை சந்திப்பு சாலையில் , நாள்தோறும் , ஏராளமான வாகனங்கள் செல்லும். அதனால் இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
 
எனவே, இப்போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில்,ஒரு போக்குவரத்து காவலர் இந்த சாலையில் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். 
 
இந்த நிலையில் ,கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக, அந்த நான்குமுனை சாலை வழியாக ஒரு சிறுவன் சைக்கில் சென்றுகொண்டிருந்தான். அப்போது ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த சிறுவன் பார்க்காமல், போலீஸ்காரரை மீறி செல்ல முயன்றான்.அப்போது போலீஸ்காரர் அந்த சிறுவனை தடுத்தி நிறுத்தியதால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

அதன்பின்னர், காவலர், அந்தச் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments