Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலன் மீது திருநங்கை காவல் அதிகாரி புகார்....

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (13:35 IST)
தனது முன்னாள் காதலன் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை காவல் அதிகாரி பிரித்திகா யாசினி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவின் முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டவர் பிரித்திகா யாசினி. இவர் தற்போது சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
 
அதில், அவரின் முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தனன் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். முகநூல் மூலம் பழக்கமான ஜனார்த்தனனுடன் முதலில் நட்பாக பழகியுள்ளார் பிரித்திகா. அதன் பின் நட்பு காதலாக மாறியது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரித்திகா பிரிந்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் பிரித்திகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். 
 
எனவே, அவரை வரவழைத்த போலீசார், பிரித்திகாவிற்கு இனிமேல் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டேன் என எழுதி வாங்கி விட்டு, அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments