Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் விடுதியில் மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள்?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (14:06 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியில் மேலும் 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 22ஆம் தேதி முதல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் உள்ளனர். முதலில் 19 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போதே எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து தற்போது21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொள்ள வில்லை என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கு விடுதியில் மேலும் 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதன்மூலம் மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணியின் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து இருந்தபோது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற டெல்லி செல்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments