Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடைச்ச வரைக்கும் லாபம்... தினகரனின் அசால்ட் போக்கு

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (13:20 IST)
கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.  
 
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அமமுக போட்டியிட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என பேசினார்.  
 
ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனைத்தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது... 
 
கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.  ஆளுங்கட்சி இன்னல்கள் தந்தும் அமமுகவை கட்சியாக பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். அப்படியென்றால் கிடைத்த வரைக்கும் போதும் என தினகரன் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு..!

ஜாமீன் வழங்கிய பிறகும் வெளியே விடாமல் வைத்திருப்பது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் மனுதாக்கல்..!

இந்தியப் பரப்பில் ஊடுருவல்! சீனாவுடன் தூதரக உறவை துண்டிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

நேற்றைய சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments