Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி: புகழேந்தி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:53 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இந்த தொகுதிக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு அதிக அளவு தினகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரினை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

எனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார் என்று கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் தினகரனுக்கே கிடைக்கும் என்றும் ஆர்கே தேர்தலில் வெற்றி பெற்று தினகரன் முதல்வராக பதவியேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments