Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலுக்கு தயாராகும் டிடிவி தினகரன் ஜெயானந்துக்கு பதிலடி

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (20:24 IST)
பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறிய ஜெயானந்துக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெகு நாட்களாக இடைத்தேர்தல் நடக்காமல் உள்ளது. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததால் இரு தொகுதியிலும் இணைந்தே இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுக இரு தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமாக உள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவால் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
தற்போது திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தல் குறித்து பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற ஜெயானந்த் திவாகரன் கூறியிருந்தார்.
 
இதற்கு டிடிவி தினகரன், கத்துக்குட்டிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளிப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments