Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து முன்னிலை ; ஆர்.கே.நகரில் உறுதியான தினகரனின் வெற்றி

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (16:23 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரனின் வெற்றி உறுதியானது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.  
 
தற்போது வரை 15 சுற்றுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் சுற்று முதல் தினகரனே  முன்னிலையில் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி, டிடிவி தினகரன் 72,413 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரான மதுசூதனன் 38,966 வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் மதுசூதனனோ 20,388 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 
 
இதில் முக்கியமாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார். 
 
ஆர்.கே.நகரில் பதிவான 1,76,885 வாக்குகளில் 1,35,196 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தினகரனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு தினகரன் நேரில் வருவார் எனத் தெரிகிறது. முழு அறிவிப்பு வெளியானதும் வெற்றி சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து அவர் பெற்று செல்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments