Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 தொகுதிகள் காலி என அறிவிப்பு - மீண்டும் தேர்தல் நடைபெறுமா?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (12:22 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் வெற்றி பெற்ற 18 தொகுதிகள் காலி என அறிவிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது.
 
அதேபோல், இன்று மாலைக்குள் சபாநாயகரின் நடவடிக்கை குறித்த செய்தி அரசிதழில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, அந்த 18 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் மீண்டும்  தேர்தலை அறிவிக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments