Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு வாகனங்கள் மோதி விபத்து! இரு பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்..!

Senthil Velan
செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:28 IST)
திருத்தணி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த சரக்கு வாகனமும் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் நோக்கி சென்ற சரக்கு வாகனமும் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
 
இதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளநீர் வியாபாரியும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டார். இந்த மூன்று வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.  கடும் பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ALSO READ: களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.! காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம்.!!
 
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் கிராமிய போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments