Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (19:17 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துகுடியை சேர்ந்த இரண்டு வட்டாட்சியர்கள் தான் அனுமதி கொடுத்தனர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் வட்டாட்சியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இடமாற்றம் என்பது தண்டனையல்ல, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments