Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாடையில் 10.3 கிலோ தங்கம் கடத்திய 2 பெண்கள் சென்னையில் கைது.. சுங்கத்துறையினர் அதிரடி

Mahendran
செவ்வாய், 26 மார்ச் 2024 (16:02 IST)
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் செயல் அதிகரித்து வரும் நிலையில் இன்று இரண்டு பெண்கள் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பெண்கள்சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய நிலையில் இருவரையும் சந்தேகப்பட்ட  சுங்கத்துறையினர் அவர்களை சோதனை செய்ததில், அவர்கள் தங்கள் உள்ளாடையிலும், சூட்கேசிலும் கடத்திய தங்கம் பிடிபட்டுள்ளது
 
ரூ.7 கோடி மதிப்பிலான 10.3 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், இரு பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments