Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி போல் திரைப்படங்கள் வெளியீடும் நிறுத்தப்படுமா? உதயநிதி கேள்வி

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (08:42 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விட மாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகளும், சில இயக்குனர்களும் போர்க்கொடி தூக்கினர். இதனால் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது திரையுலகினர் பிரச்சனை முடிவடைந்து வரும் வெள்ளி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் திரையுலகினர்களுக்கு மூன்றாம் கலைஞர் என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
 
ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..என்று கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை திரையுலக சங்கங்களின் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments