Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருப்பம்போல் சீருடை அணியலாம்: மும்பை பள்ளியின் புது முயற்சி!

uniform
, ஞாயிறு, 29 மே 2022 (11:01 IST)
விருப்பம்போல் சீருடை அணியலாம்: மும்பை பள்ளியின் புது முயற்சி!
மாணவ மாணவிகள் தங்கள் விருப்பம்போல் சீருடை அணியலாம் என மும்பையைச் சேர்ந்த பள்ளி ஒன்றின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு குறிப்பிட்ட சீருடை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்பதும் அந்த சீருடையை மட்டுமே மாணவ மாணவிகள் அணிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஆதித்ய பிர்லா வேர்ல்டு அகாடமி என்ற பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்கர்ட், பேண்ட் என எந்த சீருடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
 
மாணவர்கள், மாணவிகள் தங்களுக்கு பிடித்த சீருடையை அணிந்து கொண்டு வரலாம் என்றும் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பள்ளியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த அதிரடி முடிவு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகள் திறந்தபிறகே மாணவர் சேர்க்கை! – தேதி அறிவிப்பு!