Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில் அருகே தீ வைத்த மர்ம நபர்.. போலீசார் வலைவீச்சு..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:47 IST)
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் அந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை கீழே ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த தீ கொழுந்து விட்டு எரிய எரிய அவர் மேலும் மேலும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக கபாலீஸ்வரர் கோயில் கதவுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் மயிலாப்பூர் கோவில் அருகே தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments