Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்பு...மருத்துவர் கைது

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:16 IST)
சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்தது தொடர்பாக  மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் திருமணம் ஆகாத நிலையில், கர்ப்பம் ஆன நிலையில் இதையறிந்து அதிர்ச்சசி யடைந்த பெற்றோர், அவரை அங்கேயுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி மகளை அனுமதித்தனர்.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி  சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார்.  மேலும், பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தது. உடனே குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்லம்மாள் மீது போக்சோ  உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments