Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை. வானதி சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:49 IST)
ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கோவையில் பாஜக சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை செய்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பொன்முடி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ’பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் உள்ளிட்டவரை காப்பாற்றுவதற்காக பாடுபடும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments