Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களுக்கு கட்டுப்பாடு... சென்னையில் வண்ண பாஸ்கள்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (15:29 IST)
விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளனர். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. 
 
இந்நிலையில், விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆணையர் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, 
 
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் தினமும் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில், விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. 
 
அவசர மருத்துவ சேவை, திடீர் உயிரிழப்பு, திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும். அத்தியாவசிய வேலைகளை செய்வோருக்கும் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்