Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை நம்பி ஏமாந்தேன் - தேமுதிக நிர்வாகி ராஜினாமா

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (20:21 IST)
கடந்த இரண்டு நாட்களாகவே தேமுதிக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது . இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்தியது பிடிக்காமல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி விஜய் பவுல்ராஜா ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த விஜய் பவுல்ராஜா விஜயகாந்த்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
 
அதில், திரைப்படத்தில் நடித்த உங்களை நம்பி ஏமாந்து வந்த ரசிகர்களில் நானும் ஒருவன். 1999 ல் ரசிகர்  மன்றம் தொடங்கி தற்போது வரை உங்களுடன் பயணித்ததற்கு நான்  வெட்கப்படுகிறேன். இவ்வாறு   எழுதப்படுள்ள இக்கடிதத்தில் இனியும் உங்களின் நடிப்பை நம்பி எமாற தயாராக இல்லை. அதனால் தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனாள் தேமுதிகவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments