Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (15:57 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை செளந்திரராஜன்

அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை 'மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு கொடுக்க கூடாது என்று தேர்தல் கமிசனிடம் வலியுறுத்துவோம். கடந்த முறை எத்தனை லட்சம் தொப்பிகளை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இறக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே' என்று கூறினார்.

அப்போது நிருபர் ஒருவர் 'தொப்பி சின்னத்தை பார்த்து உங்களுக்கு பயமா? என்று கேட்டபோது, 'நாங்கள் துப்பாக்கியை பார்த்தே பயப்பட்டதில்லை, தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம், வாளை பார்த்தே பயப்பட்டதில்லை, தொப்பியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? எந்தவித முறைகேடும் தொப்பி சின்னத்தால் நிகழக் கூடாது என்பதற்காகவே அவருக்கு தொப்பி சின்னம் மீண்டும் தரக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்' என்று தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments