Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 21 மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:15 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னதாகவே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

பல இடங்களில் மணிக்கணக்காக ஒரே சீராக மழை பெய்து கொண்டே இருந்துள்ளது. இந்த பருவமழை நாளுக்கு நாள் தீவிரமைடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பலமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இரண்டு நாட்களும் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments