Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (13:08 IST)
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், இலவச பார்க்கிங், கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களை எம்.ஆர்.,பியில் விற்க வேண்டும், அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்பட சில விஷயங்களை நேற்று விஷால் தெரிவித்தார்



 
 
இந்த நிலையில் இதுகுறித்து அதிருப்தி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியபோது, 'எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
விஷால் கூறும் கருத்துக்கள் சரியானவை என்றாலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல் விஷால் பேசுகிறார்; யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது என்பதை அவர் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். 
 
மேலும் 16 ஆண்டுகளுக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ராமநாதன், கட்டண உயர்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்த நிலையிலும், முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ எங்கள் பிரச்சனைகளை நீக்கினர் என்றும் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments