Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர். சமாதிக்கு திடீரென சென்ற வைகோ! என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (22:49 IST)
கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வது அரசியல்வாதிகளுக்கு ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று செய்த அரை மணி நேர தியானம் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. அன்றுமட்டும் அவர் ஜெ. சமாதிக்கு செல்லவில்லை என்றால் மறுநாள் சசிகலா முதல்வராக பதவியேற்றிருப்பார்



 


ஓபிஎஸ் அவர்களுக்கு பின்னர் சசிகலாவின் சபதம், தீபாவின் எழுச்சி, தீபா கணவர் மாதவனின் புதுக்கட்சி முயற்சி ஆகிய ஜெயலலிதாவின் சமாதியில் நடந்த நிகழ்வுகள் என்று கூறலாம். ஆனால் அதிமுக தலைவர்கள் எல்லோருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை. ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் பல அரசியல்வாதிகள் எம்.ஜி.ஆர். சமாதியை கண்டுகொள்வதில்லை என்பதுதான் அனைவரின் வருத்தம்

இந்நிலையில் அதிமுகவை பல ஆண்டுகாலம் எதிர்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறியபோது, '''அ.தி.மு.க-வை ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு, இது நூற்றாண்டு விழா. அந்தக் கட்சியால் வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் இந்த விழாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இன்று, அந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சுயநலத்துக்காகவே பாடுபடுகின்றனர். இதனால்தான் எம்.ஜி.ஆரைப் போற்றும்வகையில், அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அதற்கான விழாவைக் கொண்டாடியிருக்கிறார் வைகோ'' என்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments