Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டார்:தோசை மாவுக்காக சண்டை

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (10:38 IST)
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மளிகை கடைகாரருடன் நடந்த வாக்குவாதத்தில், ஜெயமோகன் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், வெண்முரசு, போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார். தற்போது கடல், 2.0 உட்பட,  இன்னும் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிவருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வாங்கிய தோசை மாவு புளித்து போயிருந்ததால் மளிகை கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதத்தின் போது கடைக்காரர், ஜெயமோகனை தாக்கியுள்ளார். கடைக்காரர் தாக்கியதில் ஜெயமோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே ஜெயமோகன், பார்வதிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன், பல எழுத்தாளர்களுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments