Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலிபுரம் அருகே பயங்கர கார் விபத்து: நடிகை யாஷிகா படுகாயம்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (06:59 IST)
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
இதில் சம்பவ இடத்திலேயே வள்ளிச்செட்டி பவணி என்பவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இவர் யாஷிகா ஆனந்த் நெருங்கிய தோழி என கூறப்படுகிறது. இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் உள்பட மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments