Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்காடு பேருந்து விபத்து: ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை

Mahendran
புதன், 1 மே 2024 (10:00 IST)
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் வெளியாகியுள்ளது.
 
மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாகவும், விபத்திற்கு பேருந்து வேகமாக சென்றதே காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்டமாக பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. அடுத்தகட்டமாக  ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments