Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபம் ஏற்றுவதில் உள்ள அற்புத தகவல்களை தெரிந்துக்கொள்வோம்...!!

தீபம் ஏற்றுவதில் உள்ள அற்புத தகவல்களை தெரிந்துக்கொள்வோம்...!!
பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.
 
விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.
 
தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.
 
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
 
விநாயக பெருமானுக்கு - 1, 7 தீபம், முருகருக்கு - 6 தீபம், பெருமாளுக்கு - 6 தீபம், நாக அம்மனுக்கு - 4 தீபம், சிவனுக்கு - 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு - 2 தீபம், மகாலட்சுமிக்கு - 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
 
தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் - சிங்கம் - நந்தி முன்பாக, பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக, பெருமாள் - கருடன் முன்பாக, முருகர் - மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.
 
தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு - 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
 
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயா லாற்ற வைத்து, நிலை யான அமைதியைத் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில தெரிந்துக்கொள்ளவேண்டிய பூஜை முறைகள் என்ன...?