Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை போட்டியில் புதிய சாதனை படைத்த தோனி-கோஹ்லி

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (05:31 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி, பாண்டியா ஆகியோர் சூப்பராக பேட்டிங் செய்தனர்



 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் தோனி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் அவர் அடித்த அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரை சதங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
 
மேலும் இந்த போட்டியில் மேலும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 10வது வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் தோனி தலைமையில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் நடந்த போட்டியில் தோனி, கோஹ்லி இருவருமே சாதனை செய்தது சென்னை ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments