Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் அணி எது?

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று புனே மைதானத்தில் பகலிரவு போட்டியாக 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கொடுத்த 336 என்ற இலக்கை வெகு எளிதாக இங்கிலாந்து அணி அடைந்து வெற்றி கனியை பறித்துள்ளதை அடுத்து அந்த அணி இன்னும் வலுவாக தான் உள்ளது என்பது உறுதியாகிறது
 
இருப்பினும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இன்றைய போட்டியில் நடராஜன் அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் அணிகளின் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments