Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஓவரில் 7 பந்துகள் வீச்சு: ஐபிஎல்லில் முறைகேடு ...

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (18:01 IST)
ஹைதராபாத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் இதை பற்றி பெரிதாக யாரும் கண்டுக்கொள்வதாய் தெரியவில்லை. 
 
கடந்த திங்கள்கிழமை, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.  
 
இந்த போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீசியதில், 12 வது ஓவரில்  7 பந்துகள் வீசப்பட்டுள்ளன. இந்த ஓவரில் ஒரு வைய்டு, நோபால் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
களத்தில் இருக்கும் நடுவர் இதை தடுத்திருக்க வேண்டும் அல்லது லெக் அம்பயர் கவனத்திருக்க வேண்டும். ஆனால், இதை எதையுமே யாரும் செய்யவில்லை. 
 
கிரிக்கெட் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு மேல் கூடுதலாக ஒரு பந்துவீசுவது குற்றமாகும். இது குறித்து இதுவரை எந்த புகாரும் கூறப்படவில்லை. ஐபிஎல், பிசிசிஐ அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments