Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு எப்போது? யுவராஜ்சிங் அதிரடி அறிவிப்பு

Advertiesment
யுவராஜ்சிங்
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (08:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னணி வீரருமான யுவராஜ்சிங் தனது ஓய்வு குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
 
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் முழுவதும் பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதில்தான் உள்ளதாகவும், இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
யுவராஜ்சிங்
2018ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி யுவராஜை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி! மும்பைக்கு மீண்டும் ஒரு தோல்வி