Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதி போட்டியில் சோலோவாக ஓடி அரையிறுதிக்கு தகுதியடைந்த தடகள வீரர்!!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:59 IST)
லண்டனில் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தடகள வீரர் ஒருவர் தனியாய் ஓடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


 
 
போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த ஐசக் மக்வாலா, தகுதிப் போட்டியில் தனியாக ஓடி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 
200 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிப் போட்டி நடப்பதற்கு, முன் ஏற்பட்ட வயிற்று வலியால், அவர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 
 
இதனால், போட்டி விதிகளின்படி தகுதிப் போட்டி முடிந்த பிறகு, 48 மணி நேரத்துக்குள் மீண்டும் களத்தில் இறங்கினால், மறு வாய்ப்பு அளிக்கப்படும்.
 
இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் போட்டியில் பங்கேற்க மக்வாலா தயாராகிவிட்டார். 200 மீட்டர் தூரத்தை, 20.53 விநாடிகளுக்குள் கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. தனியாக களத்தில் இறங்கிய மக்வாலா, 20.20 விநாடிகளில் கடந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments