Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் காட்டிய ஆஸ்திரேலிய பேட்ஸ்வுமன்கள் – இமாலய இலக்கை எட்டுமா இந்தியா ?

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (14:04 IST)
மகளிர் உலகக் கோப்பை டி- 20 இறுதிப்போட்டி இன்று  மெல்போர்னில் நடந்து வரும் நிலையில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் சேர்த்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 நாடுகள் பங்கேற்றன. இந்தியா  சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முந்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றி முதலிடம் பிடித்த இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் டி -20 இறுதிப்போட்டி,இன்று மெல்போர்னில் நாளை நடந்துவருகிது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர்.

இருவரும் முதல்  விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், ஹீலே 75 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மூனி 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments