Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்னே அடிக்காமல் விழுந்தது விக்கெட்! – தொடர் சொதப்பலில் வங்கதேசம்!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:17 IST)
இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெற்று வரும் பகல் – இரவு ஆட்டத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்களில் டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் இரவு – பகல் ஆட்டமாக நடந்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 89 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை பெற்று டிக்ளேர் செய்துள்ளது.

இதில் கோலி சதம் அடித்து அணியின் ரன்ரேட்டை அதிகப்படுத்தியதுடன் இரவு – பகல் ஆட்டத்தில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார். புஜாரா, ரஹானே ஆளுக்கொரு அரைசதம் வீழ்த்தி அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்திய அணியை விட 241 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ள வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. முதல் ஓவர் முடிவதற்குள்ளாகவே ஒரு ரன் கூட எடுக்காமல் ஷ்மான் இஸ்லாம் அவுட் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments