Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (22:46 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணன் வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் தனது எல்லைக்கோட்டை தாண்டிவிட்டதாக தெரிய வந்ததால் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக வீரர் கோவிந்தனின் பலவருட கனவு கையில் கிடைத்து பின்னர் கலைந்தது.

இருப்பினும் லட்சுமண் கோவிந்தன் கோடிக்கணக்கானோர் உள்ளங்களில் பதிவானார். அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பலர் ஆறுதல் கூறியதோடு, பதக்கம் பெற்று நாடு திரும்பும் வீரருக்குரிய மரியாதையை அவருக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு 10000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணனுக்கு மத்திய அரசு ரூ 10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு லட்சுமண் கோவிந்தனுக்கு இன்ப அதிர்ச்சியான அறிவிப்பு என்பதை சொல்லவும் வேண்டுமா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments