Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் உன்னை தேர்வு செய்ய சொல்லவில்லை… உத்தப்பாவிடம் கூறிய தோனி!

நான் உன்னை தேர்வு செய்ய சொல்லவில்லை… உத்தப்பாவிடம் கூறிய தோனி!
, வியாழன், 25 மார்ச் 2021 (16:55 IST)
சென்னை அணியில் இந்த ஆண்டு களமிறங்க உள்ள உத்தப்பா அணிக்குள் வந்தது குறித்து கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ரூபாய் மூன்று கோடிக்கு ராஜஸ்தான் அணி ராபின் உத்தப்பாவை ஏலம் எடுத்தது. இருப்பினும் அவர் தொடக்க ஆட்டக்காரர் உள்பட பல்வேறு நிலைகளில் விளையாடியும் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் ஒரு அரைசதமோ, சதமோ கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ராபின் உத்தப்பா தருமாறு சிஎஸ்கே கேட்டுக் கொண்டது . அதற்கேற்ப அவர் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சிஎஸ்கே அணியினருடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தன்னை தோனி சொல்லி அணி நிர்வாகத்தினர் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவரிடம் பேசிய தோனி ‘நான் உன்னை எடுக்க சொல்லவில்லை. நீ உன் திறமையின் மூலமாகவே இங்கே வந்துள்ளாய்’ எனக் கூறியதாக சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் மீண்டு வருவேன்: ஸ்ரேயாஸ் அய்யர் ட்வீட்!