Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 28 May 2025
webdunia

இந்திய வீரர்கள் இப்போது இதைதான் செய்யவேண்டும்… கவாஸ்கர் ஆலோசனை!

Advertiesment
கோலி
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:47 IST)
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியைப் பற்றி பெரிதாகக் கவலைக் கொள்ள கூடாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வதில் மனதளவில் சிக்கல்கள் எழுந்திருக்கும். இதைப்பற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடனான தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்தடுத்து போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருப் பி பிரிவில் நம்பர் 1 இடத்தில் ஆப்கானிஸ்தான்… அசைக்க முடியாத ரன்ரேட்!