Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லியே கேப்டனாக நீடிப்பது யார் எடுத்த முடிவு – சுனில் கவாஸ்கர் காட்டம் !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (14:10 IST)
இந்திய அணியின் கேப்டனாகக் கோஹ்லியே தொடர்வது என்பது யார் எடுத்த முடிவு என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்ட போது அவர் உலகக்கோப்பை தொடர்வரை செயல்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீண்டும் கோலியே கேப்டனாக நியமிக்கபட்டாரா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு கோஹ்லியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘விராட் கோலி கேப்டனாக அணிக்கு தொடர்வது அவரின் விருப்பதின் அடிப்படையில் இருக்கிறதா அல்லது தேர்வுக்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் கோலி தொடர்கிறாரா ?. மீண்டும் கோலியை கேப்டனாக நியமித்து இருக்கிறோம் என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி சொல்வதற்கு தேர்வுக்குழுவினருக்கு 5 நிமிடம் கூட கிடைக்கவில்லையா?. சரியாக செயல்படாத தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அணியாக சரியாக செயல்படவில்லை என்பதற்காக கோலி மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments