Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி மேல் தோல்வி: விராத் கோஹ்லிக்கு சோதனை மேல் சோதனை

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (23:17 IST)
தோனிக்கு பிறகு இந்திய அணியை  வெற்றிகரமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோஹ்லியின் தலைமையிலான பெங்களூர் அணி தோல்வி மேல் தோல்வி அடைந்து கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.



 


இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் விராத் கோஹ்லியின் பெங்களூர் அணி மீண்டும் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி வழக்கம் போல் சொதப்பலான பேட்டிங் காரணமாக 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 135 என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி தற்போது 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 5 புள்ளிகள் மட்டுமே பெற்று 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகமே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments