இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை இழந்தவுடன் தென்னாபிரிக்க அணி டிக்ளர் செய்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற 549 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிய நிலையில், தற்போது அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 549 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யக் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.