Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா! 287 இலக்கை எட்டுமா?

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (00:12 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது.

இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டன. முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய கேப்டன் விராத் கோஹ்லி, முரளிவிஜய் மற்றும் ராகுல் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டதால் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது

இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டுக்களை கைவசம் வைத்திருக்கும் இந்திய அணிக்கு வெற்றிக்கு தேவையான 252 ரன்களை எடுக்குமா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments