Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை போட்டியில் மழை.. ஜெய்ஸ்வால் - ஹர்திக் அதிரடி ஆட்டத்தால் வெற்றி..!

Siva
திங்கள், 29 ஜூலை 2024 (07:13 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் இடையில் மழை பெய்தாலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 89 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பெரேரா அபாரமாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஹர்திக், சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போது திடீரென மழை பெய்ததால் 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 6.3 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்த போட்டியில் ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

இந்த நிலையில் மூன்று போட்டிகள் தொடர் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0  என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments