Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை கொஞ்சிய இந்திய வீராங்கனைகள்… வைரலாகும் செல்ஃபி!

Advertiesment
India
, செவ்வாய், 8 மார்ச் 2022 (09:48 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான்  அணிகள் மோதிய பெண்கள் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் தனது மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தது. ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ராகர் மற்றும் ஸ்னெ ரானா ஆகியோர் தலா ஒரு அரைசதம் வீழ்த்தினர்.

இந்நிலையில் பின்னதாக பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் இந்தியாவின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. 43 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 137 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டியது இந்தியா. இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.
India

இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப்பின் கைக் குழந்தையை தூக்கிக் கொஞ்சி, அந்த குழந்தையோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த செல்பி இணையத்தில் பரவி கிரிக்கெட் ஸ்பிரிட் இதுதான் என ரசிகர்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜடேஜா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்… அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சொன்ன தோனி!