Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் அனைவரும் கிரிக்கெட்டர்கள்… கோலிக்கு ஆதரவாக பாக் முன்னாள் கேப்டன்!

நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் அனைவரும் கிரிக்கெட்டர்கள்… கோலிக்கு ஆதரவாக பாக் முன்னாள் கேப்டன்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (16:27 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் விதமாக சிலர் பேசிவருவது கண்டனத்துக்குரியது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இது சம்மந்தமாக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ‘கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சியை விமர்சிக்கலாம். ஆனால் அவரின் குடும்பத்தைத் தாக்கிப் பேசுவதும் மிரட்டுவதும் தவறாகும். ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து அணியைக் கட்டுப்படுத்த அந்த ஒரு அணியால் மட்டும்தான் முடியும்! முன்னாள் கேப்டன் கணிப்பு!