Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டரா? கபில் தேவ் என்ன சொல்கிறார்?

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (21:44 IST)
வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுடைய ஹர்திக் பாண்டியா அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த நைத்து போட்டிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டரா? என்பது குறித்து கபில் தேவ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டர் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும் அவரிடம் உள்ளது. 
 
எந்த ஒரு வீரரும் ஆல்ரவுண்டராக இருந்தால், கேப்டனுக்கு அது சிறந்ததாகவே இருக்கும். தற்போதைய இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது செயல்பட்டதை விட பின்வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிகிறது என தெரிவித்துள்ளார். 
 
சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 16 வருடமாக தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில் தேவ். 1978 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டு வரை கபில் தேவ் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments