Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்ப இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா? தோனியின் முடிவால் ரசிகர்கள் சோகம்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:23 IST)
சி எஸ் கே அணியின் கேபட்ன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதாக தற்போது அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. சென்னை அணிக்காக 4 முறை கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் தோனிக்கு இந்த முறை கோப்பையோடு விடையளிக்க வேண்டும் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments