Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… நடையைக் கட்டிய ராகுல்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:06 IST)
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது முதல் விக்கெட்டாக தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுலை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 290 ரன்கள் சேர்த்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதையடுத்து ஆடிய இந்தியா நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் நிதானமாக ராகுலும், ரோஹித் ஷர்மாவும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 46 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் கீப்பர் பேர்ஸ்டோ வசம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போது இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments