Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா டக்-அவுட் ஆன போதிலும் வெற்றி பெற்ற மும்பை.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (07:48 IST)
நேற்றைய போட்டியில் மும்பை அணி 215 என்ற இமாலய இலக்கை விரட்டிய நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆனார். ஆனால் மும்பை அணி மிக அபாரமாக விளையாடி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் மிக அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 215 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால் அதே நேரத்தில் மும்பை அணியின் இசான் கிசான் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார் என்பதும் கடைசி நேரத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 18.5 ஓவர்களில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தற்போது 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments