Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்… இந்தியா நிதானத் தொடக்கம்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (15:31 IST)
மழைக் காரணமாக நேற்று கைவிடப்பட்ட போட்டி இன்று தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து 23 ஆம் தேதி இறுதிநாளாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றாவது போட்டி தொடங்குமா அல்லது மழை குறுக்கிடுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் போட்டி திட்டமிட்ட படி தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பேட் செய்ய முடிவெடுத்தது. களமிறங்கிய இந்திய அணி சற்று முன்புவரை விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் நிதானமான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments