Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து! – தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (15:07 IST)
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்று போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற பாயிண்ட் கணக்கில் யமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் பி.வி.சிந்து வென்று இறுதி போட்டியில் நுழைந்தால் பதக்கம் வெல்வது உறுதி.

கடந்த ஒலிம்பிக்கில் இறுதி போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து இந்த முறை தங்க பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments