Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு இந்த பரிசும் உண்டு

Webdunia
வியாழன், 26 மே 2016 (11:53 IST)
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு இந்த ஆண்டே ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

 
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஆகஸ்டு மாதம் 5ம் தேதி முதல் 21 வரை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்காக மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டியதில்லை.
 
இந்த ஆண்டே விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முன்பு பெறவில்லை எனில் உடனடியாக அந்த விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
 
இதே போல் அணிகள் பிரிவில் பதக்கம் வெல்லும் போது, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்து ஜொலித்த வீரர் யார்? என்பது பார்க்கப்படும். அத்தகைய வீரர் முன்பு அர்ஜூனா விருது பெறவில்லை என்றால், அவரது பெயர் அந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு இந்த ஆண்டே ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments